Friday, August 19, 2011

சராசரி இந்திய பிரஜை - 1

நான் ஒரு சராசரி இந்திய பிரஜை. சுத்தி என்ன நடந்தாலும் கவலை படாம, நான் உண்டு என் வேலை உண்டு-னு இருக்கற நூறு கோடி பேர்ல நானும் ஒருத்தன். அன்னா ஹசாரே உண்ணாவிரதம் இருந்தா பாராட்டிட்டு facebook-ல ஷேர் பண்ணிட்டு வேற எவனாவது போஸ்ட் பண்ணிருக்கற வீடியோ-வ பாக்க போய்டுவேன். அப்புறம் ஏதாவது ஊழல எதிர்த்து யாராவது உண்ணாவிரதம், ஊர்வலம், மாநாடு போட்டாங்கன்னா போகணும்னு ரத்தம் துடிக்கும்  ஆனா கரெக்டா அந்த நேரத்துல அத விட முக்கியமான வேலை வந்துடும் அத பாக்க போய்டுவேன். அதுக்காக நாட்டு மேல அக்கறை இல்லன்னு லாம் இல்லங்க. நெறையா இருக்கு. 
இந்த நாடு அமெரிக்கா இங்கிலாந்த விட பெருசா வரணும், நாம அந்த ஊருக்கு போக ஆச படர மாதிரி நம்ம நாட்டுக்கு வர மத்த நாட்டுக்காரன் எல்லாம் துடிக்கனும், நம்ம நாட்டு பேர சொன்னாலே உலக சபை ல ஒரு மரியாத இருக்கணும்; இந்த ஆசை எல்லாம் எனக்கும் இருக்கு. யாராவது இந்தியா பத்தி தப்பா பேசினா அசிங்கமா திட்டி தீத்துடுவேன்.  இந்தியா இந்தியா-னு பெருமையா சொல்லிக்கறோம் ஆனா ஒரு நாளாவது நாம ஒழுங்கா நடந்துக்கரோமா??  லிஸ்ட் போட்டா கணக்குல அடங்காது - green சிக்னல் 3 sec தான் பாக்கி இருக்குன்னா அவசர அவசரமா போய் கிராஸ் பண்ணுவோம்; ஆனா red signal 5 sec இருக்கும் போதே வண்டிய மூவ் பண்ணிடுவோம், கோட்டுல நிக்க மாட்டோம், ராங் சைடு ல தைரியமா overtake பண்ணுவோம், ரோட்டுல problem-னா உடனே எறங்கி மத்த டிராபிக் அ பிளாக் பண்ணி சண்ட போடுவோம், அர செகண்ட் கூட பொறுமை இல்லாம ஹாரன் அடிப்போம், எப்பவாது மாட்டிகிட்டா கண்டிப்பா டிராபிக் போலீஸ்க்கு லஞ்சம் மட்டும் தான் குடுப்போம். வெறுமன ரோட்டல travel பண்ணறதுல இவ்வளவு தப்பு பண்ணற நாம எந்த மூஞ்சிய வெச்சுக்கிட்டு நாட்ட ஆளரவண நல்லவனா இருக்க சொல்லறோம்?? "அவங்க நல்லவங்களா இருந்தா நாங்க ஒழுங்கா இருப்போம்" அப்படின்னு சொல்லுவோம் most times. ரூல்ஸ் போட்டாதான் அறிவு வருமா??  ம***படிச்ச நாமதான் இவ்வளவையும் பண்ணறது. ஒருத்தன திருத்தினா இந்த ஊர திருத்தலாம். அந்த ஒருத்தன தேட வேண்டாம். நமக்குள்ள இருக்கான். நாம திருந்துவோம். ஒவ்வொரு தப்பா திருத்துவோம். 


தொடரும்...