Monday, October 12, 2009

அலுவலகத்தில் ஒரு நாள் - கடைசி நாள்

போன போஸ்ட்லயே சொன்னேன்ல வேலைய விட்டுட்டேன் னு. போன வெள்ளிகிழமை தான் கடைசி நாள். அன்னைக்கு பொழுது வழக்கம் போல பொறுமையா பத்தரைக்கு விடிஞ்சது. மெதுவா எழுந்து பிரஷ் பண்ணிட்டே டிவி போட்டேன். அது ஒரு பழக்கம் - சும்மா கிராஸ் பண்ணும் போது டிவி அ பாத்து எல்லா சேனல்லையும் என்ன போடறான்னு ஒரு தடவ பாத்துட்டு அப்டியே போறது ஒரு தனி சுகம். அன்னைக்கும் அப்டிதான் டிவி போட்டேன். எடுத்த உடனே சன் மியூசிக் ஓடிட்டு இருந்தது..... சிம்பு பாட்டு... ஐய்யயோ மாத்து மாத்து.. காலைல நான் வரல இந்த வெளையாட்டுக்கு. 


டிவி ஆப் பண்ணிட்டு நிதானமா கெளம்பிட்டு இருந்தா மணி 11:30. பன்னிரண்டு மணிக்கு Exit Interview வர்ஷா உடன். வர்ஷா - ஆபீஸ் ல இருக்கற மிக திறமையான ஒரு HR. வேகமா கெளம்பி ஆபீஸ் போய் என் டெஸ்க்ல இருந்து பேப்பர் எல்லாம் எடுத்து விக்ரம் (என்னோட டீம் லீட்) ப்ராஜெக்ட் சம்பந்த பட்ட பேப்பர் லாம் சைன் ஆப் வாங்கிட்டு  வேகமா இன்னொரு பில்டிங் ல இருக்கற வர்ஷா-ட போனேன். வாங்கி பாத்துட்டு "என்ன தம்பி கையெழுத்து வாங்க சொல்லி குடுத்தா அப்டியே கொண்டு வந்திருக்க. போய் எல்லா டிபார்ட்மென்ட் லையும் sign off வாங்கிட்டு வா" னு சொல்லி திரும்ப குடுத்துட்டாங்க. "நான் மெயில் ல எல்லாத்தையும் தெளிவா சொல்லிருந்தனே" அப்டின்னு சொன்னாங்க. "கெளம்பறோம் னு எல்லா மெயில் ஓட சேத்து அதையும் டெலிட் பண்ணிட்டேன். ஈஈஈஈஈஈஈ......" இது நான். வேறென்ன பண்ணறது. அசடு வழிஞ்சிட்டே கெளம்பினேன். 


அதுக்குள்ள பசிக்க ஆரம்பிச்சுடுச்சு. சரின்னு நான் விக்ரம் செந்தில் மூணு பேரும் "கர் கா கானா" (அது kar kaa kaana இல்ல gar kaa kaana. Unlimited rotti and rice) போய் ரொட்டியும் ரைஸ் உம் சாப்டுட்டு வந்தோம். அப்றமா சரவணன்-ட பைக் வாங்கிட்டு மூனாவதா இன்னொரு பில்டிங் ல இருக்கற அக்கௌண்ட்ஸ் டீம் ல போய் கையெழுத்து வாங்கிட்டு அப்டியே அங்க இருக்கற நம்ம பய புள்ளைகளுக்கு எல்லாம் டாட்டா காமிச்சிட்டு அங்கருந்து கெளம்பி அடுத்த பில்டிங் போனேன். அங்க அட்மின்-ல கையெழுத்து, அப்புறம் கொஞ்சம் காத்திருந்து IT-ல ஒரு கையெழுத்து வாங்கிட்டு ஒரு வழியா வர்ஷா-ட போனேன். கொஞ்சம் formailities , signs லாம் முடிச்சிட்டு பத்து நிமிஷம் இன்டெர்வியு. அதையும் முடிச்சிட்டு அந்த பில்டிங் ல எல்லாருக்கும் டாட்டா சொல்லிட்டு என் பில்டிங் வரும் போது மணி அஞ்சு.


விக்ரம் வெவரமா சொன்னதால Accounts டீம்-அ பாக்க போறதுக்கு முன்னாடியே எல்லாருக்கும் அனுப்ப வேண்டிய மெயில் எல்லாம் அனுப்பிட்டேன். ஆக வந்து என் சிஸ்டம் ல கொஞ்ச நேரம் உக்காந்துட்டு கெளம்பலாம்னு சொன்னா திடு திப்புன்னு வா அப்டின்னு கான்பரண்ஸ் ரூம் கூட்டிட்டு போய்ட்டாங்க. மொத்த floor உம். எங்க ப்ராஜெக்ட் அப்புறம் அதே கிளையன்டோட  இன்னொரு ப்ராஜெக்ட். மொத்தம் ஒரு இருபது பேர். எல்லாரும் வந்து வாழ்த்து சொல்லி, ஒரு ஷர்ட் கிப்ட் பண்ணினாங்க. எல்லாரும் கையெழுத்து போட்ட ஒரு கார்டும். மனசுக்கு ரொம்ப நிறைவா, சந்தோஷமா இருந்துச்சு. பிரியறோம்-கர சோகமும். 


அப்புறம் என் டீம் ல எல்லாரும் (நான், விக்ரம், ஷிராஸ், சரவணன், ராகேஷ்) கீழ போய் நாயர் கடைல ஒரு டீ சாப்ட்டு கடைசியா ஒரு டாட்டா சொல்லி கெளம்பினேன். விக்ரமும் ஷிராசும் வீடு வர வந்தாங்க(வீடு ஆபீஸ் இருக்கற அதே தெரு) வந்து கொஞ்ச நேரம் பேசிட்டு வாழ்த்து சொல்லிட்டு போனாங்க. மிக சிறந்த மனிதர்கள். குடுத்து வெச்சிருக்கணும் இவங்க கூட லாம் வேல பாக்க. அப்றமா கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணிட்டு உடை மாத்திட்டு முகம் கழுவிட்டு வந்து டிவி போட்டா...


சிம்பு. ...


மாத்து மாத்து மாத்து....




Wednesday, October 7, 2009

என் முதல் பதிவு

நேத்து ஏதோ blog படிச்சிட்டு இருந்தேன். தோனிச்சு நாம கூட எழுதலாமேன்னு. So சும்மா  trying. Actually பாத்துட்டு இருக்கற  வேலைய  விட்டுட்டேன் . (அது  ஒரு  பெரிய  கத. அத பத்தி அப்புறம் நெறையா பாக்கலாம்) So இனிமே வெட்டிதானே. போர் அடிச்சா எழுதலாம். 
இனிமே நான் ஒரு Independent Journalist (இதுக்கும் இன்னொரு கத இருக்கு. கொடுமடா சாமி) 
இனிமே வர போற பதிவு எல்லாத்துக்கும் இங்கயே hint குடுத்துடலாம் போலருக்கு. இப்படிதான் எல்லாரும் blog எழுதுவாங்களா... நல்லாருக்கே 
வீட்ல அம்மா பாக்கிற சீரியல் ல இப்படிதான் "என்னது கோபால் அப்படியா சொன்னான்?" அப்படின்னு ஒரு அதிர்ச்சி ஓட யாராது கேப்பாங்க. மறு நாள் பாத்தா கோபால் வந்து "நான் நேத்து கடைக்கு போய் அரிசி வாங்கினேன்" னு ஏதாவது மொக்கையா இருக்கும். கவலையே படாதீங்க. சத்யமா என் Blog உம் அப்படி தான் இருக்கும். அட சும்மா போர் அடிச்சா மொக்க போட்டுக்க வேண்டியதுதான. Why So Serious? எனக்கு அமைதி பிடிக்கும், தாளம் போட வைக்கற இசை பிடிக்கும், தனிமை பிடிக்கும், கூட்டமா கும்மாளம் போட பிடிக்கும், இளைய ராஜா பிடிக்கும், ஏ ஆர் ரஹ்மான் பிடிக்கும், கமல் பிடிக்கும், ரஜினி பிடிக்கும், .நெட் பிடிக்கும், ஜாவா பிடிக்கும், சுறு சுறு னு வேல செய்ய பிடிக்கும், ஒன்னுமே செய்யாம தூங்க பிடிக்கும். இப்படி பிடிச்சது நெறையா இருக்கு. பிடிக்காதது இன்னும் இருக்கு. எல்லார மாதிரி தான் நானும். Got some philosophies for myself which sometimes differentiate me from others. I'm some one who can't take life as it comes. I want life my way. என்னடா திடீர்னு இங்கிலீஷ் ல சீன் போடறான்னு நெனைக்காதீங்க. மொழி ஒரு கருவி. என் மனசுல இருக்கறத எப்படி உங்களுக்கு என்னால ஈசி ஆ சொல்ல முடியும்னு பாக்கணும். அவ்ளோதான் மொழி. உங்களுக்கு புரிஞ்சிடுச்சா, அவ்ளோதான். மேட்டர் ஓவர். அது தமிழ் இங்கிலீஷ் ஹிந்தி பிரெஞ்சு எதுவா இருந்தாலும் தப்பில்ல. ஆனா மேட்டர் என்ன நா எனக்கு தமிழும் இங்கிலீஷ் உம் தான் தெரியும். ஹி ஹி நாங்கெல்லாம் ஹிந்தி அ தார் பூசி அழிச்ச பரம்பர ல. அதென்னமோ ஹிந்தி சின்ன வயசுல இருந்தே மண்டை ல ஏரல. சித்தி வீட்ல இருந்து தான் சின்ன வயசுல படிச்சேன். (காலேஜ் உம்) சித்தி இன்னொரு அம்மா :) சித்திக்கு ஹிந்தி நல்ல தெரியும். அதென்னமோ ஏழெட்டு எக்ஸாம் எழுதிருக்காங்கலாம். நல்லா முருங்க காயால அடிச்சு சொல்லி குடுத்தாங்க. ம்ம்ஹும்ம்ம் நம்ம மண்டைல ஏறவே மாட்டேன்னு ஹிந்தி அடம் புடிச்சிடுச்சு. இப்போ டீம் ல எப்பவாது யாராவது ஹிந்தி பேசினா அச்சா அச்சா னு நானும் கூட சேந்து தும்மிடுவேன். (இதெல்லாம் ஒரு பொழப்பா...!! கேக்குது கேக்குது)
வேறென்ன என்ன பத்தி சொல்லிக்க பெருசா ஒன்னும் இல்ல னு லாம் இல்ல. நெறையா இருக்கு சொல்ல. அண்ணனுக்கு இப்போ டைம் இல்ல. சோ நெக்ஸ்டு மீட் பண்ணுவோம். 


வி வில் மீட்
வில் மீட்
மீட்


சொல்லலயே எனக்கு விஜயகாந்த் னா ரொம்ப பிடிக்கும். அவரோட டயலாக் டெலிவரி காகவே நான் லாம் படம் பாப்பேன். "லெட்ஸ் ஸ்டார்ட் த மிசன்" உங்களால முடியுமா??